விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65). விவசாயி. இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்ைச பெற்றும் குணமாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் பழனிச்சாமி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





