விவசாயி விஷம் குடித்து தற்கொலை


விவசாயி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 4 Nov 2022 6:45 PM GMT (Updated: 4 Nov 2022 6:46 PM GMT)

களக்காடு அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள படலையார்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் நம்பிராஜன் (வயது 30). விவசாயி. இவருக்கும், மருதமுத்தூரை சேர்ந்த இந்து என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நம்பிராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நம்பிராஜனுக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர் கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் நம்பிராஜன் விரக்தி அடைந்தார்.

இந்நிலையில் கடந்த 2-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த நம்பிராஜன் விஷம் குடித்தார். இதனால் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.


Next Story