விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

வந்தவாசி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே கடம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 64), விவசாயி.

இவர் கடந்த 6 மாதங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் மனவேதனை அடைந்த அவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் தனியாக இருக்கும்போது மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார்.

உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மகன் தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story