விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 29 Nov 2022 6:45 PM GMT (Updated: 29 Nov 2022 6:45 PM GMT)

மயிலாடுதுறை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே செறுதியூர் மேல தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 55). விவசாயி. இவருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு காயங்கள் ஏற்பட்டன. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ரவி சம்பவத்தன்று பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story