விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 19 Dec 2022 6:45 PM GMT (Updated: 20 Dec 2022 7:19 AM GMT)

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கோட்டூர் அருகே உள்ள கொங்கலப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 43). விவசாயி. இவர் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. மேலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் சைலன்சர் பட்டு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ராஜகோபால், மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்தார். அவரிடம், உறவினர்கள் கேட்டதற்கு விஷம் குடித்துவிட்டதாக கூறியதாக தெரிகிறது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, வரும் வழியிலேயே ராஜகோபால் இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story