விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 26 Jun 2023 12:35 AM IST (Updated: 26 Jun 2023 5:09 PM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரி சண்முகபுரம் தெருவைச் சேர்ந்தவர் அருணாசல பாண்டியன். இவருடைய மகன் செல்வகுமார் (வயது 42). விவசாயி. இவருடைய மனைவி சித்திரை வடிவு. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். செல்வகுமார் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் இரவில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலையில் செல்வகுமார் இறந்து கிடந்ததைப் பார்த்த மனைவி, குழந்தைகள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் ஸ்டீபன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்த செல்வகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story