தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை


தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
x

தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

வீரபாண்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமுத்துரை (வயது38). விவசாயி. இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு மோதீஸ் (9) தனீஸ் (7) என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் திவ்யா கடந்த 10 மாதமாக பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் மனமுடைந்த காமுத்துரை தனது வீட்டில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story