விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x

சேரன்மாதேவி அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவியை அடுத்த கங்கனாங்குளம் அருகே உள்ள பிள்ளைகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்த நயினார் (வயது 48). விவசாயியான இவருக்கு தங்கபாய் என்ற மனைவியும், 3 மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நயினார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சேரன்மாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story