தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை


தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
x

திருக்காட்டுப்பள்ளி அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள தோகூர் மந்தை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது37).விவசாயி. இவருடைய மனைவி சாந்தி (32). இவர் சம்பவத்தன்று உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். அப்போது சுப்பிரமணியன் தனது வீட்டின் திண்ணையில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துவாக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில்தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயா பிள்ளை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story