மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை

வாணியம்பாடியில் மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
வாணியம்பாடியை அடுத்த ஊசி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 46), விவசாயி. இவரது வீட்டில் குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த நடராஜன் நேற்று மதுவில் விஷம் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





