ஆட்டோ மோதி விவசாயி பலி


ஆட்டோ மோதி விவசாயி பலி
x

சேத்துப்பட்டில் ஆட்டோ மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

மேல்மலையனூர் ஒன்றியம் கம்மந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54), விவசாயி. இவர் சேத்துப்பட்டில் ஆரணி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆரணியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ செல்வராஜ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story