பாம்பு கடித்து விவசாயி சாவு


பாம்பு கடித்து விவசாயி சாவு
x

பாம்பு கடித்து விவசாயி இறந்தார்.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

அன்னவாசல் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60) விவசாயி. இவர் நேற்று அன்னவாசல் பெரியகுளம் அருகே உள்ள தனது வயலில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, சுப்பிரமணியனை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story