பாம்பு கடித்து விவசாயி சாவு


பாம்பு கடித்து விவசாயி சாவு
x
தினத்தந்தி 26 Feb 2023 6:45 PM GMT (Updated: 27 Feb 2023 7:37 AM GMT)

வேதாரண்யம் அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர்சிவக்குமார் (வயது44). விவசாயி. இவர் கடந்த 23-ந் தேதி தனது வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரை கட்டு விரியன் பாம்பு கடித்ததால் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் வேட்டைக்காரன் இருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story