வாய்க்காலில் மூழ்கி விவசாயி பலி


வாய்க்காலில் மூழ்கி விவசாயி பலி
x

வாய்க்காலில் மூழ்கி விவசாயி உயிரிழந்தார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 43). விவசாயியான இவர் தனது ஆடு, மாடுகளை அதே கிராமத்தின் வடக்கே உள்ள அவரது வயலுக்கு மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவரைத் தேடி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது சுண்டக்குடி மருதையாறு தடுப்பணை அருகே அவர் நீரில் மூழ்கிய நிலையில் கிடந்துள்ளார்.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவக்குமார் வாய்க்காலில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கினாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story