மின்சாரம் தாக்கி விவசாயி பலி


மின்சாரம் தாக்கி விவசாயி பலி
x

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி அத்திமாகுலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60), விவசாயி. இவர் நேற்று அவரது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது நிலத்தில் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதை தெரியாமல் வெங்கடேசன் மின் கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மின்சாரத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் இறந்த வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story