மின்சாரம் தாக்கி விவசாயி பலி


மின்சாரம் தாக்கி விவசாயி பலி
x

மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அருகே புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 59) விவசாயி. இவர் நேற்று மாடுகளுக்கு புற்கள் அறுப்பதற்காக அப்பகுதியில் உள்ள வயலுக்கு சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் அவர் மிதித்ததாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அன்பழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story