மின்னல் தாக்கி விவசாயி பலி


மின்னல் தாக்கி விவசாயி பலி
x

சங்கரன்கோவில் அருகே நேற்று மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே நேற்று மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

பலத்த மழை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் பூமாரி (வயது 50). விவசாயி. இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

நேற்்று மாலையில் பூமாரி அப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பலத்த இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது.

மின்னல் தாக்கி...

இதில் திடீரென்று பூமாரி மீது மின்னல் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த பூமாரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story