கார் மோதி விவசாயி பலி


கார் மோதி விவசாயி பலி
x

சேத்தியாத்தோப்பு அருகே கார் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

சிதம்பரம் அருகே உள்ள என்னாநகரம் கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம்(வயது 55). விவசாயி. இவர் சிதம்பரத்தில் இருந்து சேத்தியாத்தோப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பாழ்வாய்க்கால் அருகில் சென்றபோது, பின்னால் வந்த ஒரு கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஏகாம்பரம் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏகாம்பரம் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது மகன் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story