மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி
x

எருமப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாமக்கல்

எருமப்பட்டி

விவசாயி

எருமப்பட்டி பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி (வயது 38). இவர் விவசாயி. இவரது மனைவி சுவாதி (24). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இவர் எருமப்பட்டியில் இருந்து பொன்னேரி கோம்பை காட்டில் உள்ள தனது சொந்தமான தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அதேபோல் பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த சுப்ரமணி என்பவரும், அவர் மனைவி வசந்தாவுடன் பொன்னேரி கோம்பையில் உள்ள தோட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பொன்னேரி கோம்பை நாகி ரெட்டி தோட்டம் என்ற இடத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பாலதண்டாயுதபாணி தலையில் படுகாயம் அடைந்து கிடந்தார். அதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சாவு

அங்கு சிகிச்சை பலனின்றி பாலதண்டாயுதபாணி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி வசந்தா ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எருமப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.


Next Story