விவசாயி தற்கொலை


விவசாயி தற்கொலை
x

ஏர்வாடி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடியை அடுத்த திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 53). விவசாயி. இவருக்கு சொந்தமான வீடு வள்ளியூர் சமத்துவபுரத்தில் உள்ளது. இதனை அவர் விற்பனை செய்தார். இதுசம்பந்தமாக அவருக்கும், அவரது மனைவி மாரியம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த செல்வகுமார் கடந்த 5-ந்் தேதி விஷம் குடித்தார். இதனால் மயங்கிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி செல்வகுமார் நேற்று இறந்தார். இவருக்கு 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story