விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x

ஜேடர்பாளையம் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 51) விவசாயி. இவரது மனைவி துளசிமணி. தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததால் பழனிச்சாமிக்கும் அவரது மனைவி துளசிமணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி பழனிச்சாமி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பழனிச்சாமி வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி துளசிமணி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் பழனிச்சாமியை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் நேற்று பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற ஜேடர்பாளையம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story