விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அத்தியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 48). விவசாயி. இவரது மனைவி தீபலட்சுமி (39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மோகன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகாததால் மோகன் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தீபலட்சுமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மோகனை காப்பாற்றி நாமக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story