தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை


தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
x

திருவையாறு அருகே பசுமாடு இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு அருகே உள்ள தில்லைஸ்தானம் குடிதாங்கியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது36). விவசாயியான இவர் ஒரு பசுமாட்டை வளர்ந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பசுமாடு ஒரு பள்ளத்தில் தவறி விழுந்து இறந்தது. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த ரமேஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவர் மனைவி ரஞ்சிதா மருவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story