விவசாயி தற்கொலை


விவசாயி தற்கொலை
x

பூதலூர் அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

பூதலூர் அருகே உள்ள சோழகம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமர்(வயது31). விவசாயியான இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் ராமர் வயலுக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்று அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு கொண்டாா். அவரை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராமரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டார் என கூறினர். இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story