விவசாயிகள் பாமாயிலை கொட்டி போராட்டம்


விவசாயிகள் பாமாயிலை கொட்டி போராட்டம்
x
தினத்தந்தி 22 July 2023 8:45 AM IST (Updated: 22 July 2023 8:45 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பாமாயிலை கொட்டி போராட்டம் செய்தனர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக மானிய விலையில் தேங்காய் எண்ணையை ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுல்தான்பேட்டை அருகே விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 17-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தது.

அப்போது விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பாமாயிலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணைத்தலைவர் அரசேந்திரன், மாவட்ட செயலாளர் வேலு மந்திராச்சலம், வக்கீல் பிரபாகரன், இனாம் நில விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் கனகராஜ், ரகுராம், சுல்தான்பேட்டை ஒன்றிய நெசவாளர் அணிசெயலாளர் சவுந்தர்ராஜன், மூங்கில் தொழுவு பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story