நெல் விற்பனைக்கு விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டுகோள்


நெல் விற்பனைக்கு விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டுகோள்
x

நெல் விற்பனைக்கு விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நவரை பட்டத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக குழுமூர், கோவிந்தபுத்தூர், அருள்மொழி, இடங்கண்ணி ஆகிய 4 இடங்களில் 2-ம் கட்டமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் அருகே உள்ள விவசாயிகள் ஆதார், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நேரில் கொண்டு சென்று முன்பதிவு செய்ய வேண்டும். நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவை உறுதி செய்ததும், சம்பந்தப்பட்ட விவசாயி செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும். பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு, விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும், ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு நெல்லை கொண்டு சென்று விவசாயிகளின் கைரேகையை பதிவு செய்து விற்பனை செய்யலாம், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story