2 மணி நேரம் காக்க வைத்ததால் விவசாயிகள் கவலை


2 மணி நேரம் காக்க வைத்ததால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 15 July 2023 7:00 PM GMT (Updated: 15 July 2023 7:00 PM GMT)

2 மணி நேரம் காக்க வைத்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

நாகப்பட்டினம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டம் தொடக்க விழா விழா நடந்தது. இதற்காக பயானிகளான விவசாயிகளை காலை 9 மணிக்கு வரும்படி வேளாண்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். அந்த நேரத்தில் விவசாயிகள் விழா நடக்கும் இடத்துக்கு வந்து காத்திருந்தனர். ஆனால் விழா 11 மணியளவில் தொடங்கியது. விழா நடக்கும் நேரத்தை முன்பாகவே சரியாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தால் அதற்கு தயாராகி வந்திருப்போம். தற்போது 2 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்த தால் விவசாய பணிகள் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.


Next Story