வேளாண் எந்திரங்களை குறைந்த வாடகைக்கு விவசாயிகள் பெறலாம்


வேளாண் எந்திரங்களை குறைந்த வாடகைக்கு விவசாயிகள் பெறலாம்
x

வேளாண் எந்திரங்களை குறைந்த வாடகைக்கு விவசாயிகள் பெறலாம்.

பெரம்பலூர்

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலை ஆட்கள் பற்றாக்குறையை சமாளித்து, விவசாய பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக குறைந்த வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்ய உழவன் செயலி இ-வாடகையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகைக்கு விடப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை வீட்டில் இருந்தே உழவன் செயலி இ-வாடகை மூலம் முன் பணம் செலுத்தி வாடகைக்கு முன்பதிவு செய்யலாம். இதில் டிராக்டர், மினி டிராக்டர் எந்திரத்திற்கு குறைந்தது 2 மணி நேரமும், அதிக பட்சமாக 20 மணி நேரமும், நெல் அறுவடை எந்திரத்திற்கு குறைந்தது 1 மணி நேரமும், அதிக பட்சமாக 20 மணி நேரமும் முன் பணமாக செலுத்தி வாடகைக்கு பெறலாம். பணத்தை யு.பி.ஐ., நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தி ஒப்புகை சீட்டையும், முன் பதிவு செய்த வேளாண் எந்திரங்கள் விவரத்தையும் அறியலாம்.

விவசாயிகள் எந்திர வாடகையினை குறைந்தது 36 மணி நேரத்திற்கு முன்னதாகவும் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள்ளும் முன் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் தாங்கள் முன் பணமாக செலுத்திய வாடகையினை ரத்து செய்ய விரும்பினால் முன் பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்து கொள்ள வேண்டும். மேலும் பயன்படுத்தப்படாத வாடகை தொகையை பெற்றிட சம்பந்தப்பட்ட உபகோட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.


Next Story