விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கான இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலக 2-வது தளத்தில் உள்ள பிரதான கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். எனவே விவசாயிகள் அன்றைய தினம் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





