விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்க உள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ளும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை 25-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கலெக்டர் அலுவலக கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்ற பின் மனுக்களை அளிக்க வேண்டும். எனவே விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்து பயன்பெறலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story