விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.

மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கணினியில் பதிவு

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story