விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்


விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:47 PM GMT)

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கடலூரில் 19-ந்தேதி நடக்கிறது.

கடலூர்

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 19-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் நடக்கிறது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, பேசுகிறார். கூட்டத்தில் கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்க உள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.

இக்குறைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும், தொடர் நடவடிக்கை எடுக்கவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story