விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்


விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
x

திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடக்கிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

கூட்டத்தில் கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் விவசாயிகளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது சமயம் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும்.

இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story