விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்


விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
x

திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் கலெக்டர், அனைத்துத் துறை மாவட்ட அலுவலர்களுடன் விவசாயிகளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முகாமில் வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். அது சமயம் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும்.

இத்தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story