நாகர்கோவிலில் நாளை மறுநாள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அறிவிப்பு


நாகர்கோவிலில் நாளை மறுநாள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அறிவிப்பு
x

நாகர்கோவிலில் நாளை மறுநாள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நடப்பு மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கடந்த மே மாத பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் கலெக்டரால் நேரில் பெறப்படும்.

கோரிக்கை மனுக்கள் பதிவு செய்து ஒப்புகை பெறும் வசதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும். கலெக்டரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story