விவசாயிகள் கருத்தரங்கு


விவசாயிகள் கருத்தரங்கு
x
தினத்தந்தி 28 July 2023 6:45 PM GMT (Updated: 28 July 2023 6:47 PM GMT)

கடையம் அருகே கோவிந்தபேரியில் விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே கோவிந்தபேரியில் பாரதிய கிசான் சங்கம் சார்பில் விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது. குறைந்த செலவில் மண்ணை வளமாக்கும் உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் தயாரிப்பு பயிற்சி, பயிரில் மகசூல் கூட்டும் மகத்தான தொழில்நுட்பங்கள், இடுபொருட்களை கைகளால் செய்து பார்த்தல் ஆகிய பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டத்தில் இயற்கை விவசாயிகள் விஸ்வநாதன், சுதாகர், லட்சுமிதேவி, ராஜா, முருகன், அரவிந்த், கிருஷ்ண பிரகாஷ் ஆகியோர் இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளித்தனர். கூட்டத்தில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் நீலகண்டன் செய்திருந்தார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.


Next Story