சான்று பெற்ற நெல்விதைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் அதிகாரி அறிவுறுத்தல்


சான்று பெற்ற நெல்விதைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்  அதிகாரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 31 Aug 2023 7:00 PM GMT (Updated: 31 Aug 2023 7:01 PM GMT)

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நடப்பு சம்பா பருவத்தில் சான்று பெற்ற நெல்விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என அதிகாரி அறிவுறுத்தினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நடப்பு சம்பா பருவத்தில் சான்று பெற்ற நெல்விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என அதிகாரி அறிவுறுத்தினார்.

நெல் விதை

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன. எனவே விவசாயிகளுக்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டுமன்றி போதிய அளவு இருப்பும் உள்ளது. மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நல்ல லாபகரமான வேளாண்மைக்கு நல்ல விதை ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு ஆகியன இன்றியமையாதது. இதில் முக்கியமானது ஆதார ெநல் விதையாகும். ெநல் விதை அல்லது தரமான விதை எனப்படுவது பாரம்பரிய குணங்களையும் அதிக முளைப்புத்திறனையும் பட்ச பெற்றிருக்கும்.

பிற ரகங்கள் மற்றும் களை செடிகளின் விதை இல்லாமலும் பூச்சி நோய் தாக்கம் இல்லாமலும் மண் மற்றும் செடிகளின் பாகங்கள் இல்லாமல் விதை சான்று துறையால் சான்று செய்யப்படும் விதைகளாக இருக்க வேண்டும்.

ஒரே மாதிரி விதைகள்

வல்லுநர் விதை (மஞ்சள் அட்டை பொருத்தப்பட்டது) மற்றும் ஆதார நல் விதை (வெள்ளை அட்டை பொருத்தப்பட்டது) உபயோகித்து விவசாயியின் வயலின் உற்பத்தியாளரால் சாகுபடி செய்யப்படுகிறது. பயிர் பூக்கும் தருணத்தில் 15 நாட்கள் முன்னதாக விதை சான்றளிப்பு துறையால் விதைப்பண்ணையாக பதிவு செய்யப்படுகிறது. விதைப்பண்ணை பூக்கும் தருணத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் விதைச்சான்று அலுவலரால் வயலில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆய்வின்போது வயல் தரம் மற்றும் விதைத்தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டுமே விதை பண்ணைகளிலிருந்து விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கு கழிவுகள் நீக்கப்பட்டு சுத்தமான ஒரே மாதிரியான விதைகள் பிரிக்கப்படுகின்றன.

பயன் அடையலாம்

இது தவிர சுத்திகரிக்கப்பட்ட விதை குவியல்களில் விதை மாதிரி எடுக்கப்பட்டு விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. பகுப்பாய்வில் தேறிய விதை குவியலுக்கு சான்றட்டை பொருத்தப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. எனவே விவசாயிகள் இதை முழுமையாக தெரிந்து கொண்டு சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்தி பயன் அடையலாம். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.


Next Story