மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது


மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது
x

மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினராக பணியாற்றி வருபவர் பவுலின் சோபியா ராணி. இவர் திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் போலீசில் அளித்த புகாரில், "திருச்சியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியை அவரது தந்தையே கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு செய்துள்ளதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி இருந்தார். அதன்பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தந்தையை கைது செய்தனர்.


Next Story