ஜீப் மோதி தந்தை, மகள்கள் படுகாயம்


ஜீப் மோதி தந்தை, மகள்கள் படுகாயம்
x

குரங்கணிக்கு சுற்றுலா சென்றபோது ஜீப் மோதி தந்தை, மகள்கள் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 37). அவருடைய மகள்கள் கவுசி (10), பிரபாசினி (6). நேற்று முனியாண்டி தனது மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் குரங்கணிக்கு சுற்றுலா வந்தார். போடி-குரங்கணி சாலையில், அடுக்கு பாறை அருகே வந்தபோது, எதிரே வந்த ஜீப் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குரங்கணி போலீஸ் நிலையத்தில் முனியாண்டி புகார் அளித்தார். அதன்பேரில் குரங்கணியை சேர்ந்த ஜீப் டிரைவர் மொக்கைச்சாமி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story