கெஞ்சி கேட்டும் தந்தை மதுப்பழக்கத்கத்தைநிறுத்தாததால் கல்லூரி மாணவி தற்கொலை


கெஞ்சி கேட்டும் தந்தை மதுப்பழக்கத்கத்தைநிறுத்தாததால் கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 20 Oct 2023 6:45 PM GMT (Updated: 20 Oct 2023 6:45 PM GMT)

கெஞ்சி கேட்டும் தந்தை மது குடிப்பதை நிறுத்தாததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். கிணற்றில் குதித்த அவர், பாறையில் மோதி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

சிவகங்கை

திருப்புவனம்,

தந்தை குடிப்பழக்கம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மேலச்சொரிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி பிரியா. இவர்களுடைய மகள் காவியா ஹரிணி(வயது 19).

இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டும் அவர் அந்த பழக்கத்தை விடவில்லை என தெரிகிறது.

மது பழக்கத்தை நிறுத்துமாறு தந்தையிடம் காவியாஹரிணி அடிக்கடி கூறி கெஞ்சியுள்ளார். இதுகுறித்து தனது உறவினர்களிடம் கூறியும் வருத்தம் அடைந்தார்.

கிணற்றில் குதித்து தற்கொலை

தந்தையின் மதுப்பழக்கத்தால் பெற்றோர் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவருத்தம் அடைந்த காவியாஹரிணி, வீட்டை விட்டு வெளியே ஓடினார். இதை பார்த்த அவருடைய தாயார் பிரியா, தனது மகள் பின்ேனயே ஓடி வந்துள்ளார்.

ஊருக்கு வெளியில் உள்ள ஒரு கிணற்றில் திடீரென காவியாஹரிணி குதித்தார். அப்போது கிணற்றில் இருந்த பாறையி்ல் மோதி அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரியா மற்றும் அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக காவியாஹரிணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து பழையனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

-------------


Next Story