தந்தை-மகனை தாக்கி பணம் பறிப்பு

தந்தை-மகனை தாக்கி பணம் பறித்தவர்கள் போலீசார் தேடிவருகிறார்கள்.
பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்தவர் ராஜா. இவர் சொந்தமாக கன்டெய்னர் லாரிகள் வைத்து உள்ளார். இவர் கடந்த 22-ந் தேதி தனது மகனுடன் பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், தந்தை- மகனை தாக்கி அவர்கள் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





