ரெயிலில் இருந்து தவறி விழுந்த பீகார் வாலிபர் சாவு


ரெயிலில் இருந்து தவறி விழுந்த  பீகார் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 24 Sep 2022 6:45 PM GMT (Updated: 24 Sep 2022 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த பீகார் வாலிபர்

விழுப்புரம்

விழுப்புரம்

பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் கெஜோரி மதேபூர் பகுதியை சேர்ந்தவர் உபேந்திரராம் மகன் பங்கஜ்சிங் (வயது 29). இவர் கன்னியாகுமரியில் ஓட்டல் வேலைக்காக நேற்று முன்தினம் இரவு ரெயில் மூலம் பயணம் செய்தார். அவர் ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்தபடி செல்போனில் ஹெட்செட் மூலம் பாடல் கேட்டுக்கொண்டிருந்தார். விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு பகுதியில் ரெயில் வந்தபோது எதிர்பாராதவிதமாக ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பங்கஜ்சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story