மரத்தில் இருந்து தவறி விழுந்தமின் வாரிய ஊழியர் சாவு


மரத்தில் இருந்து தவறி விழுந்தமின் வாரிய ஊழியர் சாவு
x

மரத்தில் இருந்து தவறி விழுந்த மின் வாரிய ஊழியர் பாிதாபமாக உயிாிழந்தாா்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் நல்லிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 59). இவர் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 13-ந் தேதி தனது வீட்டின் முன்புறம் உள்ள 15 அடி உயர புளிய மரத்தில் ஏறி வீட்டுக்கு வரும் மின்சார ஒயரை சரி செய்துக் கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென மரத்தில் இருந்து பெரியசாமி தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பெரியசாமியின் மனைவி பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story