வேலூர் கோட்டை அகழியில் பெண் பிணம்


வேலூர் கோட்டை அகழியில் பெண் பிணம்
x

வேலூர் கோட்டை அகழியில் பெண் பிணமாக கிடந்தார்.

வேலூர்

வேலூர் நகரின் மையப்பகுதியில் அகழியுடன் கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டையை சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்தநிலையில் கோட்டை நுழைவு வாயில் தெற்கு பகுதியில் பெண் பிணம் மிதப்பதாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று உடலை மீட்டனர். இறந்த பெண்ணுக்கு வயது 45 இருக்கும். உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இறந்த பெண் யார்? என்ற விவரம் தெரியவில்லை. அந்த பெண் அகழி ஓரம் தனது செருப்புகளை கழற்றி வைத்துள்ளார். அகழியில் தடுமாறி விழுந்து இறந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. நேற்று முன்தினம் இரவில் தான் தண்ணீரில் விழுந்திருக்க கூடும். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story