தேவதானப்பட்டி அருகே பெண் பிணம்


தேவதானப்பட்டி அருகே பெண் பிணம்
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே பெண் பிணம் கிடந்தது.

தேனி

தேவதானப்பட்டியை அடுத்த மேல்மங்கலம் முத்தையா கோவில் அருகே உள்ள தடுப்பணையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஜெயமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேல்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சோணை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story