தேவதானப்பட்டி அருகே பெண் பிணம்

தேவதானப்பட்டி அருகே பெண் பிணம் கிடந்தது.
தேவதானப்பட்டியை அடுத்த மேல்மங்கலம் முத்தையா கோவில் அருகே உள்ள தடுப்பணையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஜெயமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேல்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சோணை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





