மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் மோதி படுகாயம் அடைந்த பெண் சாவு

பாப்பாரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் மோதி படுகாயம் அடைந்த பெண் இறந்தார்.
தர்மபுரி
பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள வள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் காளி (வயது 60). விவசாயி. இவரது மனைவி அபராஞ்சி (54). சம்பவத்தன்று காளி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் அதியமான் கோட்டை பகுதியில் மகள் வீட்டுக்கு சென்றார். அப்போது தட்டாரப்பட்டி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளும், எதிரில் வந்த ஸ்கூட்டரும் மோதி கொண்டன. இந்த விபத்தில் காளி மற்றும் அவரது மனைவி அபராஞ்சி ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இதில் காயமடைந்த அபராஞ்சியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். காளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story