மொபட் மீது கார் மோதி பெண் சத்துணவு அமைப்பாளர் பலி


மொபட் மீது கார் மோதி பெண் சத்துணவு அமைப்பாளர் பலி
x

கரூர் அருகே மொபட் மீது கார் மோதி பெண் சத்துணவு அமைப்பாளர் பலியானார்.

கரூர்

சத்துணவு அமைப்பாளர்

கரூர் வாங்கல் குப்புச்சிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 42). இவர் கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும், வாங்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் சத்துணவு அமைப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று பணியை பார்வையிட்டு தொடர்ந்து வாங்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு செல்ல மொபட்டில் கரூர்-வாங்கல் சாலையில் வேட்டைகாரன்புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் மாவட்டம், கிச்சிபாளையத்தை சேர்ந்த ஞானபிரகாசம் (42) சேலத்தில் இருந்து வாங்கல் வழியாக கரூரை நோக்கி காரில் வந்தார்.

பலி

அப்போது அந்த கார், மலர்கொடி ஓட்டிவந்த மொபட் மீது மோதியது. இதில் காரின் அடிப்பகுதியில் மலர்கொடி மொபட்டுடன் சிக்கி கொண்டார். இதில் தரதரவென இழுத்து சென்று அருகில் இருந்த மளிகை கடை முன்பு உள்ள இரும்பு கம்பி மற்றும் சுவற்றில் மோதி கார் நின்றது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மலர்கொடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஞானபிரகாசம் காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த ஞானபிரகாசத்தை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மலர்கொடியின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெங்கமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story