வெவ்வேறு சம்பவத்தில் பட்டதாரி பெண்-ரெயில்வே ஊழியர் தற்கொலை


வெவ்வேறு சம்பவத்தில் பட்டதாரி பெண்-ரெயில்வே ஊழியர்  தற்கொலை
x
தினத்தந்தி 12 Jun 2023 7:12 PM GMT (Updated: 13 Jun 2023 10:56 AM GMT)

வெவ்வேறு சம்பவத்தில் பட்டதாரி பெண்-ரெயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி தெற்கு சவுராஷ்ட்ரா தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகள் மதுபாலா (வயது 27). இவர் எம்.எஸ்.சி. உயிர் வேதியியல் படித்து விட்டு வேலையில்லாமல் இருந்து வந்தார். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர் சம்பவத்தன்று உடலுக்கு கேடுவிளைவிக்கும் ரசாயனத்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகரை சேர்ந்தவர் ஹரி பாபு (49). இவர் பொன்மலை ெரயில்வே பணிமனையில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் சமையல் அறையில் உள்ள மின் விசிறியில் உள்ள கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபாபு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story