பெண் ஆயுள் தண்டனை கைதி சாவு


பெண் ஆயுள் தண்டனை கைதி சாவு
x

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வசந்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேலூர்

வேலூர்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வசந்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை கைதி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா துரிஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மனைவி வசந்தி (வயது 45). இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் திருவண்ணாமலை டவுன் போலீசாரால் கைது செய்தனர். இந்த வழக்கில் வசந்திக்கு திருவண்ணாமலை கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

இதையடுத்து அவர் வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். வசந்தி சர்க்கரை நோய், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

இந்த நிலையில் வசந்திக்கு கடந்த 20-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடியாக ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கொரோனா தொற்று பரிசோதனைக்கு பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரின் குடும்பத்தினருக்கு ஜெயில்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வேலூர் பெண்கள் ஜெயில் ஜெயிலர் நீலாமணி பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story