குண்டர் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது
தஞ்சை அருகே குண்டர் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆரலூரை அடுத்த கீழமணக்குடி மெயின்சாலையை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி ஜெயச்சித்ரா (வயது 40). சாராய வியாபாரி. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் கும்பகோணம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி, குண்டர் சட்டத்தில் ஜெயசித்ராவை கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story